உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2023-10-29 08:51 GMT   |   Update On 2023-10-29 08:51 GMT
  • ஆயுத பூஜைக்கு அழைக்காததால் ஆத்திரம்
  • ஜெயிலில் அடைத்தனர்

வேலூர்:

வேலூர் வள்ளலார் பூங்கா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் இந்து முன்னணி சார்பில் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜை போடுவதற்காகவும் பெயர் திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்.

அப்போது அங்கு வந்த சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மதன் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகியோர் நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னை ஏன் ஆயுத பூஜைக்கு கூப்பிடவில்லை என தகராறு செய்து சந்திரசேகரை தாக்கி உள்ளனர்.

மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பினர். இது குறித்து சந்திரசேகர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News