உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்து பலியான மான்கள்.

2 மான்கள் கிணற்றில் விழுந்து சாவு

Published On 2023-04-12 15:55 IST   |   Update On 2023-04-12 15:55:00 IST
  • தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்தது
  • வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வழித் தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் சேர்ப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்தது,

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர். உடனடியாக வனத்துறை தீயணைப்பு துறையினற்க்கு தகவல் அளித்தனர்.

தகவல் அடிப்படையில் வந்த ஒடுகத்தூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர். கிணற்றில் இருந்த 2 புள்ளி மான்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதில் ஒரு மான் கிணற்றிலேயே இறந்து விட்டது. மற்றொரு மான் படுகாயமடைந்து நிலையில் வனத்துறையினர். அதற்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த மானும் இறந்துவிட்டன.

இறந்த 2 மான்களையும் ஒடுகத்தூர் வனத்துறை வனச்சரகர் இந்து, வனவர் பிரசன்ன குமார் வனக்காப்பாளர் மணிவாசுகி ஆகியோர் பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வனத்துறை அலுவலகத்தில் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News