உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த 2 நாகபாம்புகள்

Published On 2023-08-16 15:05 IST   |   Update On 2023-08-16 15:05:00 IST
  • தீயணைப்பு படை வீரர்கள் பிடித்தனர்
  • காப்பு காட்டில் விடப்பட்டது

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று குடிநீர் தொட்டியில் புகுந்துள்ளது.

தண்ணீர் தொட்டியில் இருந்து சத்தம் வருவதைகண்ட வினோத்குமார் அருகே சென்று பார்த்தார். அப்போது நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பை பிடித்தனர்.

அதேபோல், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரது வீட்டில் நேற்று மாலை 5 அடி நீளம் முள்ள நாகபாம்பு ஒன்று புகுந்தது.

இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பதுங்கி இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தனர்.

தொடர்ந்து, பிடிபட்ட 2 பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 2 நாகபாம்புகளை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

Tags:    

Similar News