உள்ளூர் செய்திகள்

ஆந்திரா காதலனுடன் சென்ற 17 வயது சிறுமி மீட்பு

Published On 2023-09-20 09:30 GMT   |   Update On 2023-09-20 09:35 GMT
  • வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்
  • வாலிபரை எச்சரித்து அனுப்பினர்

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மதரஸாபள்ளியில் உள்ள டியூஷனுக்கு சென் றார். இரவாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டியூஷன் சென்டரில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிறுமி வரவில்லை என்று தெரியவந்தது.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆந்திர மாநிலம், பலமநேரை சேர்ந்த ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரி யவந்தது.

இதையடுத்து, போலீசார் இருவரையும் நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

இதில், இருவரும் காத லிப்பதாக தெரிவித்தனர். பெண்ணிற்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலை யில் போலீசார் சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர். சிறு மியை அழைத்து சென்ற வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News