உள்ளூர் செய்திகள்

பரிசு வாங்கிய என்.சி.சி.மாணவர்கள்.

10-வது பட்டாலியன் என்.சி.சி. மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-09-15 10:27 GMT   |   Update On 2022-09-15 10:27 GMT
  • சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டு
  • வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடந்தது

வேலூர்:

வேலூர் 10-ஆவது பட்டாலியன் என்.சி.சி. படையில் சிறந்து விளங்கிய அலுவலர்கள், மாணவர்களுக்கு தமிழ்நாடு என் சி.சி. துணை இயக்குநரக ஜெனரல் பாராட்டு தெரிவித்தார்.

வேலூர் காட்பாடி காந்தி நகரி லுள்ள 10-ஆவது பட்டாலியனில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படைஅலுவலர்கள், என்சிசி மாண வர்களை பாராட்டும் நிகழ்ச்சி வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடைபெற்றது.

இதில்,தமிழ்நாடு என்சிசி துணை இயக்குநரக ஜெனரல் அடுல்குமார் ரஸ்டோகி பங்கேற்றார். அவருக்குகல்லூரி என்சிசி மாணவர்கள் துப் பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

தொடர்ந்து, என்சிசியில் சிறப் பாக பணியாற்றிய அலுவலர்கள், வேலூர் 10-ஆவது பட்டாலியன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற என்சிசி ஊரீஸ் கல்லூரி மாணவி சத்தியப்பிரியா, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவர் கரண்குமார் ஆகியோருக்கும், முகாமில் சிறந்து விளங்கிய என்சிசி மாணவர்கள் அருண், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கினார்.

சென்னை 'அ' பிரிவு குரூப்கமாண்டர் ஜர்னைல் சிங், காட்பாடி 10-ஆவது பட்டாலிய னின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பணி யாற்றிய பேராசிரியர்களை கவுரவித்தனர். முன்னதாக, கல்லூரியின் நிதி காப்பாளர் எஸ்.கேலப்நோபுள் சந்தர் வரவேற்றார்.

கல்லூரித் தலைவர் ஹெச்.ஷர்மாநித்யானந்தம் கல் லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கல்லூரித் துணை முதல்வர் ஜெ.ஆனிகமலாஃபிளா ரன்ஸ் தொடக்க உரையாற்றினார்.

என்.சி.சி. அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஊரீஸ் கல்லூரி என்சிசி அலுவலர் சி.ஞானலின்ஷைனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News