உள்ளூர் செய்திகள்

 வேத பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

வேத பாராயணம் நிகழ்ச்சி

Published On 2022-10-31 15:18 IST   |   Update On 2022-10-31 15:18:00 IST
  • அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.
  • கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும்.

இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேதபாராயணம் செய்வதற்கு உரிய அந்தணர்களைக் கொண்டு வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தணர்கள் ஒன்பது பெயர் வேதங்களை பாராயணம் செய்தனர்.

நிகழ்ச்சியில் பெங்களூர் ரவிகுமார் கலந்து கொண்டார். கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News