உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேகம்
- காலை 7 மணி முதல் ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை நடைபெற்றது.
- விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
காலை 7 மணி முதல் பஞ்சஸூக்த ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை வருசாபிஷேகத்திற்கான கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலை மையில் விழா குழுவினர் செய்தனர்.வருசாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.