உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு மருந்து பெட்டகத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. 

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-28 10:18 GMT   |   Update On 2023-01-28 10:18 GMT
  • படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளையும் வழங்கினார்.

குண்டடம்:

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கக்கட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார் , வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், செங்கோடம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News