உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.


வாசுதேவநல்லூர் அருகே பா.ஜனதாவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Published On 2022-06-05 09:55 GMT   |   Update On 2022-06-05 09:55 GMT
  • வாசுதேவநல்லூர் அருகே மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
  • அ.தி.மு.க.- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இணைந்தனர்.

சிவகிரி,

சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள மலையடிக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கராஜ், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து கொண்டார்.

இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வழக்கறிஞர் ராம்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார்

இந்நிகழ்ச்சியில் ராமராஜா, பாண்டித்துரை, பழனிச்சாமி, அர்ஜூனன், சங்கர், சோழராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News