உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Published On 2023-06-25 14:35 IST   |   Update On 2023-06-25 14:35:00 IST
  • ஆசிரியர் பணியே அறப்பணி” அவற்றை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • ஒரு மாணவர் மற்றும் பேராசிரியரின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியமானது என்று கூறி தனது தலைமையுரையை ஆற்றினார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சீனிவாசா நகரில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.6.2023 முதல் 23.6.2023 வரை இரண்டு நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க மாக அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனி. திருமால்முருகன் ஆசிரியர் பணியே அறப்பணி" அவற்றை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், பேராசியர்களாகிய உங்க ளுக்கும் மாணவிகளுக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்க வேண்டும்.

ஒரு மாணவர் மற்றும் பேராசிரியரின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியமானது என்று கூறி தனது தலைமையுரையை ஆற்றினார்.

அதியமான் கல்வி நிறுவங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன் ஒரு பேராசிரியர் மாணவர் களை அதிகமாக பேச ஊக்குவிக்க வேண்டும், தற்போதைய நிகழ்வுகளை அறிய செய்ய வேண்டும். இது மாணவிகளின் சிந்தனை செயல்முறையை புரிந்து கொள்ளவும் மேம்படுத்தவும் உதவும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கார்ப்பரேட் சாஃப்ட் ஸ்கில்ஸ் குரல் மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர் ஆஷாமால்வே கலந்து கொண்டார்.

இரண்டாம் நாள் 23.06.2023 பயிற்சி வகுப்பில் நேர மேலாண்மையை பேராசிரி யர்கள் எவ்வாறு கையா ள்வது என்பதற்கும் விளையா ட்டுக்கள் வழியாகவும் பாடத்திட்டத்தை மாணவி களுக்கு உற்சாகத்துடன் கற்பிப்பது குறித்து பல்வேறு திறன்சார் பயிற்சிகளை வழங்கினார்.

மேலும் மாணவிகளின் பிரச்சனைகளை எளிய முறையில் தீர்வு காண்பது ,விவாத பங்கேற்பு, கற்றல் முறைகள், பேராசிரியர்கள் எப்போதும் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்றும் குழுவாக செயல்படுவதன் மூலம் வெற்றியடையலாம் என்றும் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றினார்.

Tags:    

Similar News