உள்ளூர் செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள்

Published On 2022-06-28 10:38 GMT   |   Update On 2022-06-28 10:38 GMT
  • பாரதியார் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
  • 80 மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள புனித தெரசன்னை ஆரம்பப்பள்ளியில் பாரதியார் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை நிர்வாகி பேட்ரிக் ஏற்பாட்டின் மூலம் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. மொத்தம் 80 மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனதலைவர் தமிழ் வெங்கடேசன், யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் சரவணன், விடியல் தன்னார்வு அமைப்பு நிறுவனர் லாரன்ஸ், பள்ளி தாளாளர் தந்தை லியோன் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி நவீஸ், அறக்கட்டளை செயலாளர் கங்காதரன் ,பொருளாளர் டீனாஜெனிபர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News