உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2023-01-18 13:07 IST   |   Update On 2023-01-18 13:07:00 IST
  • 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சேலம்:

சேலம் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே நேற்று 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News