உள்ளூர் செய்திகள்
போக்சோ சட்டத்தில் கைதான கமரன், மன்மதராஜா.

மனநலம் பாதித்த 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேர் கைது

Published On 2022-06-10 10:39 IST   |   Update On 2022-06-10 10:39:00 IST
  • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட வாலிபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று தனித்தனியாகவும், கூட்டாகவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
  • மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமரன் (வயது 22), மன்மதராஜா (22). இருவரும் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

அதே தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அடைய நினைத்த கமரன், மன்மதராஜா இருவரும் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட அவர்கள் சிறுமியை வீட்டுக்கு பின்புறம் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். பின்னர் சிறுமியை இருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வலியால் அலறித்துடித்துள்ளார். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குபதிந்து கமரன், மன்மதராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News