உள்ளூர் செய்திகள்
விஷம் கலந்த தண்ணீரை குடித்து 2 மாடுகள் சாவு
- 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
- 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
மத்தூர்,
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பக்கமுள்ளது பச்சியப்பன் வட்டம். இந்த ஊரை சேர்ந்தவர் கண்ணுபெருமாள் (87). விவசாயி. இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தன. மேலும் அந்த 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து கண்ணு பெருமாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மாடுகளுக்கு விஷம் கொடுத்து சாகவைத்தது யார், என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.