உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

Published On 2023-10-20 09:38 GMT   |   Update On 2023-10-20 09:38 GMT
  • தருமபுரி அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானர்கள்
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி அடுத்த பழைய தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, (38) மேஸ்திரி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 17 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 17 ந்தேதி காலை கல்லூரி சென்றவர் மதியம் உணவு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் கல்லூரி வரவில்லை என தெரிகிறது. இதனை யடுத்து கல்லூரி ஆசிரியை முனுசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே போன்று தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லபுடையாம்பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (52) இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகள் பிரியா (19) அருகே உள்ள கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லை என கடந்த 16 ந்தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அன்று மதியம் 1 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும், உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் அவர் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து சின்னப்பையன் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பிரியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News