உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரி, மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-18 10:12 GMT   |   Update On 2022-10-18 10:12 GMT
  • திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • கைதானவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஊரப்பாக்கம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்கிற சுரேஷ் (வயது 34), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல மறைமலைநகர் அண்ணா சாலை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் நொச்சிக்குளம் பகுதி சேர்ந்த மைக்கேல்ராஜ் (26), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News