உள்ளூர் செய்திகள்
தூங்காவி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
- இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார்.
- போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் முகாம் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சியம்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வக்கீல்கள் தம்பி பிரபாகரன், எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.