உள்ளூர் செய்திகள்

2-ம் சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் புல் தரை சீரமைப்பு

Published On 2022-07-17 09:30 GMT   |   Update On 2022-07-17 09:30 GMT
  • குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது.
  • இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர்

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் பூங்காவில் உள்ள மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு ரசிப்பர்.

பின்னர் பூங்காவில் உள்ள புல்தரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறியும், குழந்தை களுடன் விளையாடி மகிழ்ந்தும் உற்சாகமாக பொழுதை கழிப்பா்.

குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது. இதையடுத்து புல்தரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பூங்காவில் உள்ள புல்தரை தற்காலிகமாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்து ள்ளனா்.

Tags:    

Similar News