உள்ளூர் செய்திகள்

எட்வின் குயின்

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; நேர்முகத் தேர்வுக்கு சென்ற பெண் சாவு

Published On 2022-12-31 13:50 IST   |   Update On 2022-12-31 13:50:00 IST
  • மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
  • மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கொத்தமங்கலம் ரோடு, கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி எட்வின் குயின் (வயது 35). இவர் கடந்த 15-ந் தேதி கப்பியாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்ள இவருடைய மைத்துனர் அறிவழகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். 

அவர்கள் லட்சுமிபுரம், ஒரத்தூர், வழியாக முண்டியம்பாக்கம் அருகே உள்ள ெரயில்வே கேட் அருகே செல்லும் பொழுது பின்னால் வந்த டாரஸ் லாரி எட்வின் குயின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு எட்வின் குயினுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரி ன்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த எட்வின் குயினுக்கு வெற்றிச்செல்வி, கீர்த்தனா, ப்ரீத்தி வரலட்சுமி, என்ற 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News