உள்ளூர் செய்திகள்

ஊட்டி மலர் கண்காட்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்கு சுழற்கோப்பை

Published On 2023-05-24 09:02 GMT   |   Update On 2023-05-24 09:02 GMT
  • தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
  • ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

இது 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக, ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகம், ராமு ஆகியோர் பெற்று கொண்டனர்.

Tags:    

Similar News