உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இளம் பெண், வாலிபர் மாயம்

Published On 2022-11-04 09:51 GMT   |   Update On 2022-11-04 09:51 GMT
  • திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
  • திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22)

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அவரது தந்தை ரெங்கராஜ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வேலை தேடி செல்கிறேன் என்று கூறி சென்றவர் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சமீர் அகமது அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காதர் உசேனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News