உள்ளூர் செய்திகள்
திருச்சி பொன்மலைப்பட்டி இஸ்கான்கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா
- நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது
- இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது.
திருச்சி,
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவார பஸ் நிறுத்தம் வ.உ.சி. தெருவில் இஸ்கான் அமைப்பின் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் வழிபாடு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் ஆண்டு தோறும் இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்னர் விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்த புத்திரதாஸ், பாலாஜி கோபால் தாஸ் சுவாமிகள் செய்துள்ளனர்.