உள்ளூர் செய்திகள்

மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகள்

Published On 2023-07-02 07:06 GMT   |   Update On 2023-07-02 07:06 GMT
  • தொட்டியம் அருகே மாமனாரை, மருமகள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 72). இவருக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் தர்மராஜ் கடந்த 12- வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.மருமகள் கருப்பாயி (39) மற்றும் தர்மராஜன் இரண்டு மகள்கள் ரகசியா, வர்ஷா ஆகிய மூன்று பேரையும் பூனாட்சி தோட்டம் என்ற இடத்தில் துரைராஜ் குடி வைத்து பராமரித்து வந்தார்.இந்த நிலையில் கருப்பாயிக்கும், துரைராஜ் வீட்டில் பால் கறக்க வரும் வீரமலை என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை துரைராஜ் கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி துரைராஜியை அரிவாளால் வெட்டியுள்ளார். வலி தாங்காமல் துரைராஜ் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயி மீது வழக்கு பதிவு செய்து தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரசுராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News