உள்ளூர் செய்திகள்

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-07-15 07:23 GMT   |   Update On 2023-07-15 07:41 GMT
  • ஸ்ரீரங்கத்தில் ஆவின் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
  • மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார்.ராகவேந்திரா மடம் அருகே இவர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News