உள்ளூர் செய்திகள்

பள்ளி வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-06-26 07:54 GMT   |   Update On 2023-06-26 07:54 GMT
  • அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற பள்ளி வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
  • சோமரசம் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு

திருச்சி,

திருச்சி சோமரசம்பேட்டை பொம்மாணி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 27). இவர் வாசன் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு வாசன் நகர் 7-வது கிராஸ் ரோடு பகுதியில் பள்ளி வேனை வேகமாக இயக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சுந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து வாசன நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வாசன் நகர் நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த சுந்தரை அரிவாளால் விட்டுவிட்டு தப்பி சென்றார். இதில் அவரது இடது கைகளிலும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News