உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டம்

Published On 2022-09-25 09:03 GMT   |   Update On 2022-09-25 09:03 GMT
  • திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
  • பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

திருச்சி:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கழக அமைப்பு தேர்தல்-2022 திருச்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

த.மு.மு.க. மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியான நெல்லை மைதீன் சேட்கான் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகளும், பொன்னம்பட்டி பேரூர் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகளும் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யபட்டு அறிவிக்கப்பட்டனர்.

இப்ராஹிம், இம்ரான், மணவை அக்பர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேரூர் கழகம், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News