உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

Published On 2022-06-19 14:56 IST   |   Update On 2022-06-19 14:56:00 IST
  • திருச்சியில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
  • 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்கும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

திருச்சி:

தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலைய அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாநில பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய சட்ட விதிகளை உருவாக்க வேண்டும்.

கீழ்நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்கும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News