உள்ளூர் செய்திகள்

மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

Published On 2022-12-12 10:50 GMT   |   Update On 2022-12-12 10:50 GMT
  • மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது
  • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

திருச்சி

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி 3-வது மண்டலக்குழுத்தலைவரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், உதவி ஆணையர் தயாநிதி, வன்னை அரங்கநாதன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர் கோவிந்தராஜன், மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News