உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2022-10-10 10:25 GMT   |   Update On 2022-10-10 10:25 GMT
  • எஸ்தர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.
  • ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருச்சி

திருச்சி மாத்தூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பி. இவரது மனைவி எஸ்தர்(வயது 33).

இவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். பின்னர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.

முன்னதாக பாதுகாப்பு கருதி திருமண வீட்டில் அவர் அணிந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை கழட்டி ஒரு பாக்ஸில் வைத்து தனது கைப்பையில் போட்டு வைத்திருந்தார்.

இந்த நிலையில் பஸ் ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் எஸ்தர் கைப்பைக்குள் போட்டு வைத்திருந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து எஸ்தர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News