என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "JEWELRY THEFT FROM A WOMAN"
- எஸ்தர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.
- ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சி
திருச்சி மாத்தூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பி. இவரது மனைவி எஸ்தர்(வயது 33).
இவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். பின்னர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.
முன்னதாக பாதுகாப்பு கருதி திருமண வீட்டில் அவர் அணிந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை கழட்டி ஒரு பாக்ஸில் வைத்து தனது கைப்பையில் போட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் பஸ் ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் எஸ்தர் கைப்பைக்குள் போட்டு வைத்திருந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து எஸ்தர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்