உள்ளூர் செய்திகள்

தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு

Published On 2022-12-27 09:48 GMT   |   Update On 2022-12-27 09:48 GMT
  • நாகையநல்லூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கான நீர் திறக்கப்பட்டது
  • கொல்லிமலையில் இருந்து வரப்பட்ட நீரினால் நாகையநல்லூர் ஏரி நிரம்பி வழிந்தது

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் நாகையநல்லூர்ஊராட்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியான நாகையநல்லூர் ஏரி கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கொல்லிமலையில் இருந்து வரப்பட்ட நீரினால் நாகையநல்லூர் ஏரி நிரம்பி வழிந்தது. தற்பொழுது அந்த ஏரி குமுளி கரையிலிருந்து பாசனத்திற்காக நீரை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் பூஜை செய்து மலர் தூவி திறந்து வைத்தார். இதில் நாகையநல்லூர் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் ராதாசுப்ரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், தொட்டியம் நகர கழக செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி பெரியண்ணன், ஒன்றிய கவுன்சிலர் தீபா செல்லத்துரை, ஊராட்சி மன்றத் தலைவர் ராமதாஸ், கிளைக் கழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், நாகராஜ், விசுவநாதன், சக்திவேல், சங்க பிள்ளை பூபதி, மற்றும் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், நாகையநல்லூர் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News