துறையூரில் தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
- திருச்சி மாவட்டம் துறையூரில் தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தராஜ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூரில் தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தராஜ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கிளை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், அவைத் தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சொரத்தூர் சிவக்குமார், பகளவாடி மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.