உள்ளூர் செய்திகள்

வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம்

Published On 2022-11-29 10:48 GMT   |   Update On 2022-11-29 10:48 GMT
  • வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது
  • வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது


திருச்சி:

திருவானைக்கோவில் வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.

திருவானைக்கோவில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளரும் சங்க நிறுவனத் தலைவருமான வெற்றிவேல் தலைமையில் திருவானைக்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் காவேரி பாலம் பழுது வேலை காரணமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வணிகர்களும் பைபாஸ் வழியாக செல்ல இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது. மற்றும் விபத்துகளும், டிராபிக் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் காவேரி பாலத்தை விரைந்து சீரமைத்து தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உயர் மடடக்குழு உறுப்பினர் சிவசக்தி ராமநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ் .பி .பாபு , பொருளாளர் இஸ்மாயில் சேட் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் செயற்குழு,பொதுக்குழு , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News