உள்ளூர் செய்திகள்

திருச்சி மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

Published On 2022-08-06 10:02 GMT   |   Update On 2022-08-06 10:02 GMT
  • தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்தநிலையில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.

திருச்சி :

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து அம்மனுக்கு கரகம் பாலித்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்வு நடக்கிறது. 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை குட்டிகுடித்தல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு அம்மன் திருத்தேர் வீதிஉலாவும் நடக்கிறது.

இந்தநிலையில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண் பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News