உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் ரத்த தான முகாம்

Published On 2022-09-03 09:55 GMT   |   Update On 2022-09-03 09:55 GMT
  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.
  • முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருச்சி :

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெற்றிவேல், கல்லூரியின் முதல்வர் மலர்விழி,

ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் டாக்டர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் உண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 100 மாணவ. மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

Tags:    

Similar News