உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Published On 2022-06-07 10:23 GMT   |   Update On 2022-06-07 10:23 GMT
திருச்சியில் இன்று மாலை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி:

தமிழகம் முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி புத்தூர் நால் ரோட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் எஸ். ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஒண்டி முத்து,மாவட்ட பொருளாளர் கே.செல்வதுரை, மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி எம் ராஜேந்திரன், மகளிர் அணி மாநில செயலாளர் வக்கீல் லீமா சிவக்குமார்,

மாவட்ட செயலாளர்கள் சந்து கடை சி.சதீஷ்குமார், கே.ஸ்ரீராம், மற்றும் மெடிக்கல் பழனி, மார்க்கெட் மண்டல் செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெய கர்ணா, கருமண்டபம் முட்டை செல்வம் மற்றும் திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News