உள்ளூர் செய்திகள்

பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-06-19 13:32 IST   |   Update On 2023-06-19 13:32:00 IST
  • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
  • வாரிசு சான்றிதழ் வாங்க 7 லட்சம் வரை கொடுத்து ஏமாந்த விரக்தியில் விபரீத முயற்சி

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாதா கோவில் தெரு இடையாற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அமல சாந்தி (வயது 39). இவரது பெரியம்மாவுக்கு சொந்தமாக ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து தஞ்சாவூரில் உள்ளது. இதனை தனது பெயருக்கு மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் இரு நபர்களிடம் ரூ. 7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்று குடும்பத்துடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News