திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலைமற்றொரு சம்பவத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் கருகி சாவு
- ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
- ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்ட புரம் அன்பு நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (வயது 36). தனியார் நிறுவன மேலாளர். காதல் திருமணம் செய்த இவர்களு க்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கருக்கு ரியல் எஸ்டேட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மன அழுத்தத்தில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றர். ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீயில் கருகி சாவு ஸ்ரீரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிரு ஷ்ணன் (வயது 63). பெல் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே சமையல் அறையில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிந்து ள்ளது. இது தெரியாமல் கோபா லகிருஷ்ணன் மின்சார சுவி ட்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் உடல் கருகிய அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் ரங்கராஜன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.