உள்ளூர் செய்திகள்

21 வயதுவாலிபருடன் 36 வயது இளம்பெண் எஸ்கேப்

Published On 2023-02-09 08:55 GMT   |   Update On 2023-02-09 08:55 GMT
  • 3 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு
  • போலீசில் புகார்

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செங்க–னம் பகுதியைச் சேர்ந்த–வர் கந் தன் மனைவி மங்கை–யர்க்க–ரசி (வயது 36) (இருவ–ரின் பெயர்களும் மாற்றப்பட் டுள்ளன). இந்த தம்பதிய–ருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் மங்கை–யர்க்கரசிக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வழக்கம் போல் கடந்த 24-ந்தேதி துறையூர் மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் கந்தன் மனைவியை பல் வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

இருந்தபோதிலும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கி–டையே கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மங்கை–யர்க்கரசி இதேபோன்று திடீரென மாயமாகி உள் ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அதேபோன்று வீட்டிற்கு வந்து விடுவார் என கந்தன் எண்ணியிருந்தார்.ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் ஜம்புநாதபுரம் போலீசில் கந்தன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தினர். இதில் மாயமான மங்கையர்க்கரசி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரு–கேயுள்ள மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த வீரா (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய–வந்தது.இதில் மீண்டும் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் சந்தே–கிக்கப்படுகிறது. மேலும் இருவரின் செல்போன்க–ளும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுள்ளதால் போலீ–சாருக்கு சந்தேகம் வலுத் துள்ளது. மூன்று குழந்தை–களின் தாயான 36 வயது பெண்மணி 21 வயது வாலி–பருடன் ஓட்டம் பிடித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

Tags:    

Similar News