உள்ளூர் செய்திகள்
டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருது: கலெக்டர் வழங்கினார்
- பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் விழா.
- டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தித் தொடர்பாளரும் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் 2024-25-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸருமான மேஜர் டோனர் ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
அருகில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தொடக்க கல்வி அலுவலர் பேபி மற்றும் பலர் உள்ளனர்.