உள்ளூர் செய்திகள்

மீஞ்சூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மரம் வளர்ப்பு குறித்து பயிற்சி

Published On 2022-08-06 12:41 IST   |   Update On 2022-08-06 12:41:00 IST
  • கிராமங்களில் சமூக காடுகள், முருங்கை வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

பொன்னேரி:

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமூக காடுகள் வளர்ப்பு நாற்றங்கால் வளர்ப்பு, செடி மற்றும் மரங்கள் வளர்ப்பு, குறித்து பயிற்சி முகாம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிராமங்களில் சமூக காடுகள், முருங்கை வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பின்னர் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயிலில் நர்சரி கார்டனின் களப்பணிக்காக சென்று பார்வையிட்டனர். முகாமில் வனத்துறை அலுவலர் ஞானப்பன் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி எல்லாபுரம் மீஞ்சூர் ஒன்றிய மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

Similar News