உள்ளூர் செய்திகள்
- தேனீ வளர்ப்பு முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து ரைத்து, தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பென்னாகரம் வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்ட அலுவர்கள் செய்திருந்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் அட்மா திட்டத்தின் சார்பில் தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
இதில் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்து, தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பென்னாகரம் வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்ட அலுவர்கள் செய்திருந்தனர்.