உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி

Published On 2023-03-19 15:44 IST   |   Update On 2023-03-19 15:44:00 IST
  • பாதுகாப்பு குறித்த திறன் சுய உதவ குழு பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியில் குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த திறன் சுய உதவ குழு பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், ஷகிலா, மற்றும் சுயு உதவி குழு உறுப்பினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News