உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Published On 2022-06-14 09:04 GMT   |   Update On 2022-06-14 09:04 GMT
  • மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.
  • பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும்.

சீர்காழி:

கொள்ளிடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி கூட்டத்தை தொடங்கிவைத்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயி ற்றுநர் கவிதா வரவேற்றார்.

கூட்டத்தில மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், கொரோனா பெருந்தொற்றினால் மாண வர்களுக்குஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெ ய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் நீங்கள் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

Tags:    

Similar News