உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2022-06-14 15:30 IST   |   Update On 2022-06-14 15:30:00 IST
  • விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
  • வேட்டவலத்தில் நடந்தது

வேட்டவலம்,ஜூன்.14-

வேட்டவலம் அடுத்த நீலந்தாங்கள் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி நேற்று நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். ஒன்றிய குழு உறுப்பினர். அனுராதா சுகுமார் முன்னிலை வகித்தார் உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார்.

துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணி, வேளாண்.மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் விஷ்ணு உயிர் உரம், நுண்ணூட்ட கலவை மற்றும் ஆட்மா திட்டங்கள் குறித்தும் பேசினார், இந்த பயிற்சியில் நமம் நீலந் தாங்கள் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News