உள்ளூர் செய்திகள்

ராட்சத பாறையை படத்தில் காணலாம்.

ராட்சத பாறை உருண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-12-13 07:21 GMT   |   Update On 2022-12-13 07:21 GMT
  • கல்வராயன் மலை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
  • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலையில் துரூர், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வ ராயன் மலை ஓடை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் பெரியார் மேகம் போன்ற நீர்வீழ்ச்சியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில் நேற்று முன் தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை யால் துருவூர் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இைத தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது .அருகிலுள்ள தரைபாலமும் மழைநீர் வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டது.

துரூர் சாலையில செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கல்வராயன் மலை அடிவாரத்தில் பெய்த கன மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம் பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அந்த வழி யாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News