உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே யானைகள் சாலையை கடப்பதற்காக போக்குவரத்து நிறுத்தம்

Published On 2022-06-11 09:56 GMT   |   Update On 2022-06-11 09:56 GMT
  • குட்டிகளுடன் உலா வந்த கரடி
  • செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூா், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன.

இவற்றை உண்பதற்காக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் வந்து செல்கின்றன.இந்தநிலையில் நேற்று குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பாா்க் பகுதியில் யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து ரன்னிமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

யானைகள் சாலையை கடக்கும் வரை அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் வனப் பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் சென்றன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இநத்நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News