உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-11-04 08:51 GMT   |   Update On 2022-11-04 08:51 GMT
  • ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
  • ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

ஊட்டி,

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்சச் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.இதனால் ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News