உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

Published On 2023-10-17 10:14 GMT   |   Update On 2023-10-17 10:14 GMT
  • 350-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மதுக்கூர்:

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான 350க்கு மேற்பட்டோர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

விழாவிற்கு மதுக்கூர் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார்.

ஓய்வு பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் வட்டார வள மையமேற்பா ர்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரகாஷ், வீரப்பரா ஜனும்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் நடுவர்களாக கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, மன்னங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு போட்டியா ளர்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்தனர்.

முதல் இடத்தை ஜெயபாரதியும், 2-வது இடத்தை கௌதமியும், 3-வது இடத்தை லதாவும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிவேலு பரிசுகள் வழங்கினார்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராணி , உதவி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், ஆசிரி யைகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News