உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

Published On 2022-07-08 09:06 GMT   |   Update On 2022-07-08 09:06 GMT
  • பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
  • மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திரும ருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையின் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல ம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியின் கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.ஆசிரியர்கள் தமிழ்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனை வருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார். 

Tags:    

Similar News